Tuesday, 21 February 2012

இடைத்தேர்தல்

இடைதேர்தல் 

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத்த தொடங்கி உள்ளது . ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்கள் நிலைபாட்டை அறிவித்துவிட்டன .

ஆளும்கட்சியான அதிமுக ,எதிர்கட்சியான தேமுதிக, திமுக,மதிமுக போன்ற கட்சிகள் களத்தில் நிற்கும் முக்கிய கட்சிகள் .

இடைதேர்தல் எனறாலே மக்கள் இப்போதெல்லாம் குஷி ஆகிவிடுகின்றனர் ,ராமதாஸ் சொன்னதுபோல் நம் தொகுதியில் இடைத்தேர்தல் வராத என்று மக்கள் ஏங்கும் அளவிற்கு நிலை மோசம் !

சரி இப்போது கட்சிகளின் நிலையை பார்ப்போம் .


முதலில் அதிமுக :


ஆளும் கட்சி என்பதால் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதால் தொன்டர்களிடம் உற்சாகம் கரைபுரன்டோடுகிறது.போதாத குறைக்கு அமைச்சர்கள் வேறு முகாமிட்டு"  கவனித்து " வருகிறார்கள்  .


தேமுதிக : தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றாலும் ஜெ விட்ட சவாலை ஏற்கவேண்டிய கட்டாயத்தில் வேட்பாளரை அறிவித்துள்ளார் விஜயகாந்த் . தனித்துப்போட்டியிடுவதால் இம்முறை மூண்றாவது இடத்திற்கும் ஆபத்து !!


திமுக :

உட்கட்சி சன்டைகளை சமாளிக்கவே திமுக தலைவருக்கு நேரம் பத்தவில்லை  !இந்த நேரத்தில் இடை தேர்தல் வேறு , இடைத்தேர்தலில் வெற்றி என்பது பகல்கனவு என்பதை நன்கு உனர்ந்தவர் கலைஞர்  அவருடைய  இலக்கு என்பது மதிமுக விடம் இரண்டாவது இடத்தை இழந்துவிடக்கூடாது என்பது தான் .


மதிமுக  : முல்லை பெரியார் விசயத்தில் மதிமுக தொடந்து குரல் எழுப்பியதாலும் மக்கள் பிரச்சனைகளை தொடர்ந்து எழுப்புவதாலும் மக்கள் மத்தியில் வைகோவிற்கு நல்ல செல்வாக்கு கிடைத்துள்ளது அதை அறுவடை செய்யும் இடமாக சங்கரன்கோவில் இருக்கும் என மதிமுகவினர் நம்புகிறார்கள் .இரண்டாவது இடத்தை பிடிக்க திமுகவுடன் கடும் போட்டியிடும் என்றே தெரிகிறது .

மொத்ததில் இந்த இடைத்தேர்தல்  சங்கரன் கோவில் மக்களுக்கு கொன்டாட்த்தையும் அரசியல் கட்சிகளுக்கு தின்டாட்டத்தையும்  தரப்போகும் தேர்தலாக அமையும் !்


Published with Blogger-droid v2.0.4

Monday, 20 February 2012

நிலவே வா !!

நிலவே

ஏ நிலவே ……நான் உன்னை காதலிக்கிறேன் !!


எட்டாத தொலைவில் நீ இருந்தாலும் நான் உன்னை காதலிப்பேன் !!


கேட்காத தூரத்தில் நீ இருந்தாலும்

நான் உன்னை காதலிப்பேன் !!


எனக்காக ஒரு போதும் நீ காத்திருப்பதில்லை 

என்பதை தவிர வேறொன்றும் வருத்தமில்லை உன் மீதெனக்கு !!


ஏ நிலவே நீ ஒருநாள் வரவில்லை என்றாலும் …

என் வாழ்க்கை இருன்டு போய் விடுகிறது …இனியொருமுறை அப்படிச் செய்யாதே !!


விடிவதற்குள் ஓடிஒளிந்துகொள்கிறாய்   …நான் பகல்முழுவதம் தேடித் திரிகிறேன் உன்னை !


மாதம் ஒருமுறை மட்டுமே முழுமுகம் காட்டுகிறாய் …சில நாள் தலை மட்டும் ,சிலநாள் கால் மட்டும் ,ஒரு நாள் அதுவுமில்லை !


எது எப்படியோ இன்றாவது என் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று காத்திருக்கிறேன் என்வீட்டு மொட்டைமாடியில் உன் வருகைக்காக  !


Published with Blogger-droid v2.0.4