Friday, 21 October 2011

உச்சிதனை முகர்ந்தால்

"உச்சிதனை முகர்ந்தால் " தீபாவளி திருநாள் அன்று திரைக்கு வரும் என்று" தம்பி"களான நாங்களும் ஏனைய ஈழ ஆதரவாளர்களும் எதிர்பார்க்கிறோம் !!    படத்தின் இயக்குனர் :புகழேந்தி தங்கராஜ் ,கதையின் நாயகி புனிதவதியாக :நீ நிகா (நீர்,நிலம் ,காற்று இவற்றின் முதல் எழுத்தே இவருக்கு திரைபெயராக வைத்துள்ளனர்) மற்ற கதாபாத்திரங்களாக அண்ணன் சீமான், நாசர், சத்தியராஜ் ஆகிய முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர் .
மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஜந்தறிவு ஜீவனான நாய் நடித்துள்ளதாம் !! இத் திரைபடத்தை நார்வே தமிழர்கள் தயாரித்துள்ளனர் !! கதையின் கரு :  சிட்டு குருவியாய் துள்ளித்திரியும் புனிதவதிக்கும் பெண் போரளிகளுக்கும் இடையே உள்ள நட்பு .
தமிழக மக்களுக்கு என் வேண்டுகோள் என்னவென்றால் நல்ல படங்கள் வரும்போது அதை வரவேற்கும் நீங்கள் இந்த படத்தையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் !!